வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (16:38 IST)

பொதுக்குழுவில் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்த சண்டக்கோழி விஷால்

சென்ற பொதுக்குழுவில் விஷாலுக்கும், சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் மோதல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சண்டை மேகங்கள் சூழந்தாலும் இடி மின்னல் எதுவுமின்றி அந்த பொதுக்குழு முடிந்தது.
 
நேற்று நடந்த பொதுக்குழுவில் கண்டிப்பாக சரத்குமாரும், விஷாலும் மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக சங்க தலைமைக்கு தனது ஆதரவை தெரிவித்து சண்டக்கோழி விஷால் சமாதானப் புறாவானார். பொதுக்குழுவில் பேசிய அவர்,
 
"நடிகர் சங்க‌த் தலைமைக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். நடிகர் சங்க‌த் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதாக வந்த செய்திகள் உண்மையில்லை. கேரளாவில் நடிகர் சங்கத்துக்காக நடிகர்கள் இணைந்து படத்தில் நடித்தனர். அதுபோல் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட நானும் ஆர்யா, கார்த்தி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.
 
சண்டையை எதிர்பார்த்தவர்களுக்கு விஷாலின் வெள்ளைப்புறா அவதாரம் ஓர் அதிர்ச்சிதான்.