செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (13:50 IST)

பிரியாணி விருந்துடன் களைகட்டிய யுவனின் முதல் ரம்ஜான்

யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமுக்கு மாறிய பிறகு வந்த முதல் ரம்ஜான் இது. முஸ்லீமாக இருப்பதற்கும், இஸ்லாமை பின்பற்றுவதற்கும் பெருமைப்படுவதாகக் கூறிய யுவன் முதல் ரம்ஜானை தடபுடலாக நேற்று கொண்டாடினார்.
 
இளையராஜா தீவிர இந்து கடவுள் நம்பிக்கையாளர். ரமண மகரிஷியின், மூகாம்பிகையின் தீவிர பக்தர். அவரது மகன் இஸ்லாமை தழுவியது சிலருக்கு அஜீரணமாகிவிட்டது. ஒரு இந்துவின் மகன் அதுவும் நாடறிந்த இளையராஜாவின் மகன் இஸ்லாமை தழுவுவதா என்று விமர்சித்தனர். ஆனால் யுவனின் மத மாற்றத்துக்கு அவரது குடும்பம் எதுவும் சொல்லாததுடன், அவரது விருப்பத்துக்கு பச்சைக் கொடியும் காட்டியது.
 
இந்நிலையில் நேற்று ரம்ஜானை முன்னிட்டு காலையில் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தியவர் தனது குடும்பத்தினருக்கு பிரியாணி விருந்தளித்து பண்டிகையை கொண்டாடினார்.
 
இதில் கார்த்திக் ராஜா, பவதாரிணி, இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரின் மகள் வாசுகி பாஸ்கர், இன்னொரு சகோதரர் கங்கை அமரனின் மகன்கள் வெங்கட்புரபு, பிரேம்ஜி மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.