வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (17:40 IST)

தெரு நாய் என்று தனுஷுக்கு எதிராக சர்ச்சைக்குறிய கருத்து: சித்தார்த் பதில்

தனுஷ்-க்கு எதிராக தனது டுவிட்டரில், ‘நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கணும்னு இருந்தா அத யாராலும் மாற்ற முடியாது' என்ற கருத்தை நடிகர் சித்தார்த் பதிவு செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அவர் நான் யாரையும் விமர்சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


 
 
சமீபத்தில் நடிகர் தனுஷ்-க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு தனுஷ் உறுதிபடுத்தினார். மேலும், தனக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

ஆனால், நடிகர் தனுஷ்-க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதை விமர்சனம் செய்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் ‘‘நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கணும்னு இருந்தா அத யாராலும் மாற்ற முடியாது, தமிழ் தத்துவம்’’ என்று பதிவு செய்து இருந்தார், 
 
 
சமூக வலைத்தளங்களில் நடிகர் சித்தார்த் பதிவு செய்து இருந்த கருத்துக்கு பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. மேலும், தனுஷ் ரசிகர்களும் சித்தார்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபேஸ்புக்கில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து இருந்தனர். 
 
இந்நிலையில், நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்து இருக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது, அப்போது, சித்தார்த்திடம் டுவிட்டரில் வந்த சர்ச்சை கோரிய கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது கூறுகையில், 
 
 
டுவிட்டரில் நான் யார் பெயரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. நாகூர் பிரியாணி வசனம் நான் நடித்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ளது. அது எனக்கு பிடித்த வசனம். எனவே தான் அந்த வசனத்தை டுவிட்டரில் பதிவு செய்தேன். அதில் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. 
 
இதை வைத்து கற்பனையான செய்திகள் பரவி உள்ளன. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லாத நிலையில், தற்போது வெளிவந்துள்ள வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.