வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (15:12 IST)

தயாரிப்பாளர்களான சினேகா - பிரசன்னா தம்பதி

பிரசன்னா - சினேகா இணைந்து கேம் சேஞ்சர் என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் நடுவில் காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 
 
இவர்களின் திருமணத்துக்குப் பிறகு சில விளம்பரங்களில் ஜோ‌டியாக தோன்றினர். ஆனால் இருவரும் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதனை அவர்களே உருவாக்கியுள்ளனர்.
 
தங்களின் கேம் சேஞ்சர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தை இயக்கும் லக்ஷ்மிராமு பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். படத்துக்கு டோனாவூர்ராதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர தங்களை ஒன்று சேர்த்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளனர். இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெருச்சாளி படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.