1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (20:19 IST)

தணிக்கை உறுப்பினர்கள் பற்றாக்குறை - அல்லாடும் த்ரிஷா படம்

தணிக்கைக்குழு உறுப்பினர்கள் பற்றாக்குறையால் த்ரிஷாவின் முதல் கன்னட படமான பவர் ஸ்டார் இந்த வாரம் வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த த்ரிஷா இப்போதுதான் முதல் முறையாக ஒரு கன்னட படத்தில் நடித்தார். பவர் ஸ்டார் என்ற அந்தப் படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோ. படம் முடிந்து இந்த வாரம் திரைக்கு கொண்டு வருவதாக திட்டம். ஆனால் படம் இன்னும் சென்சார் ஆகவில்லை.

தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களை தணிக்கை செய்ய போதுமான அதிகாரிகள் இல்லை. அதனால் தமிழில் இரண்டு டஜன் படங்கள் சென்சார் சான்றிதழுக்காக காத்திருக்கின்றன. அதே நிலைதான் கன்னடத்திலும்.
 
சரி, மும்பைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை வைத்து சென்சார் செய்யலாம் என முயன்றுள்ளனர். அவர்களின் துரதிர்ஷ்டம். சென்சார் சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சில அதிகாரிகள் இப்போதுதான் கைது செய்யப்பட்டனர். அதனால் மும்பையில் சென்சார் செய்ய முடியாது என்று அங்குள்ளவர்கள் கைவிரிக்க மீண்டும் கர்நாடக தணிக்கைக் குழுவுக்கே படத்தை திரையிட்டு காட்ட முயற்சித்து வருகின்றனர்.
 
கன்னட சூப்பர் ஸ்டாரின் படத்துக்கே இந்த நிலையா? கஷ்டம்தான்.