வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 17 மே 2014 (18:09 IST)

சொன்னதை செய்த தாணு

துப்பாக்கிப் படத்தின் போது தான் கொடுத்த வாக்குறுதியை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.
 
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை தாணு நடத்திக் கொண்டிருக்கிறார். சங்க நடவடிக்கைகளுக்கு அவர் போடும் முட்டுக்கட்டைகள் அவருக்கு ஒரு வில்லனின் தோற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆனால் இளம் அறிமுக இயக்குனர்களுக்கு அவர்தான் பிரம்மா.
 
துப்பாக்கி படத்தின் போது முருகதாஸின் உதவி இயக்குனர்கள் இருவரின் சுறுசுறுப்பையும், திறமையையும் பார்த்தவர் அவர்களுக்கு தனது தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு தருவதாக உறுதி அளித்தார். சொன்னபடி ஆனந்த் சங்கர் என்ற உதவி இயக்குனரை வைத்து அரிமா நம்பி படத்தை தயாரித்து வருகிறார். அதர்வா நடிப்பில் உருவாகி வரும் கணிதன் படத்தையும் தாணுவே தயாரிக்கிறார். இதனை இயக்குகிறவர் முருகதாஸின் இன்னொரு உதவி இயக்குனரான டி.என்.சந்தோஷ். தான் சொன்னபடி இரு உதவி இயக்குனர்களை இயக்குனர்களாக புரமோட் செய்துள்ளார் தாணு.
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த இருவரிடமும் தமிழின் முன்னணி நடிகர்களின் கால்ஷீட் பெற்றுத் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அவர்களோ முன்னணி எல்லாம் வேண்டாம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களே போதும் என்று விக்ரம் பிரபு, அதர்வாவுடன் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.