வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (17:52 IST)

செல்வராகவனின் மனைவி இயக்கும் மாலை நேரத்து மயக்கம்

நடிகர்கள், இயக்குனர்களின் மனைவிகள் இயக்குனராகும் காலமிது. நடிகர் உதயிநிதியின் மனைவி கிருத்திகா வணக்கம் சென்னை படத்தை இயக்கினார். தனுஷின் மனைவி ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இப்போது செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி படம் இயக்க ஆயத்தமாகிறார்.
 
இரண்டாம் உலகம் படத்தின் தோல்வி காரணமாக செல்வராகவனால் மீண்டும் படம் இயக்க முடியாத நிலை. அவர் விரைவில் படம் இயக்குவதாக அவ்வப்போது அறிவித்தாலும் நெருக்கடிகள் காரணமாக அனைத்தும் அறிவிப்போடு நிற்கிறது.
 
இந்நிலையில் அவர் ஏற்கனவே எழுதி வைத்த மாலை நேரத்து மயக்கம் கதையை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்குகிறார். இவர் திருமணத்துக்கு முன்பு செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.