வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (11:24 IST)

ஐந்து நாளில் ஐந்து லட்சம் - சந்தோஷத்தில் சந்தானம்

ஆனானப்பட்ட வடிவேலே ஹீரோவாக நடித்து ஆட்டம் கண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே என்ற புதுக்கோஷத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தை திரையிட காலசூழல் பார்த்துக் கொண்டிருக்கிறார் சந்தானம்.
சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காமெடி நடிகர்களை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. காமெடியை வைத்துதானே அவருக்கு கோடியில் ஓபனிங் என்று இவர்களும் ஹீரோவாக முயற்சிக்கிறார்கள். சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆசைக்கு ஒரு படம் என்று பார்த்தால், இந்தப் படத்துக்குப் பிறகு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்து அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளார்.
 
சமீபத்தில் இதன் முன்னோட்ட காட்சி யு டியூபில் வெளியானது. முதல் ஐந்து தினங்களில் ஐந்து லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். முன்னணி நடிகர்களுக்குதான் இப்படி லட்சக்கணக்கில் ஹிட்ஸ் கிடைக்கும். தனக்கும் அதே வரவேற்பு கிடைத்ததில் அகமகிழ்ந்து போயுள்ளார் சந்தானம். படத்துக்கும் இதே வரவேற்பு கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை.
 
பிரச்சாரத்துக்கு நடிகர்களை பார்க்க வருகிற கூட்டம் அப்படியே ஓட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையை போன்றதுதான் ட்ரெய்லருக்கு கிடைக்கும் ஹிட்ஸ்கள் டிக்கெட்டாக மாறும் என்று நினைப்பதும். இது நம்பிக்கையா மூட நம்பிக்கையா என்பது படத்தின் வெற்றியை பொறுத்தது.