1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (11:28 IST)

என்னை யாரும் நீக்கவில்லை - ராய் லட்சுமி விளக்கம்

சுந்தர் சி. இயக்கியிருக்கும் அரண்மனை படம் குறித்து நாளொரு வதந்தி பொழுதொரு சர்ச்சை. படத்தின் டீஸர் கலர் கரெக்ஷன் எல்லாம் முடியும் முன்பே இணையத்தில் எப்படியோ வெளியானது.
அந்த சர்ச்சை முடிவதற்குள், படத்தின் ஹீரோயின் யார் என்பதில் ஹன்சிகாவுக்கும், ராய் லட்சுமிக்கும் போட்டி பொறாமை என்றனர். அடுத்து, ராய் லட்சுமியின் காட்சிகளை சுந்தர். சி நீக்கிவிட்டதால் ராய் லட்சுமி அவரிடம் சண்டை போட்டார் என்று கோடம்பாக்கத்தில் ஒரே புரளி மயம். அதற்கு ராய் லட்சுமியே விளக்கம் அளித்துள்ளார்.
 
படத்தில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் எடிட் செய்யப்படவில்லை. நான் படம் பார்த்தேன். அதில் நான் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. சுந்தர். சி யுடன் சண்டை என்பதெல்லாம் சும்மா என்று கூறியுள்ளார்.
 
ஆனால், ஹன்சிகாவுடனான சண்டை பற்றி மட்டும் அம்மணி வாய் திறக்கவில்லை. ஒருவேளை உண்மையாக இருக்குமோ?