வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (12:11 IST)

ஆர்யாவின் ஸ்பெஷல் திரையிடலும், நயன்தாராவின் நான் ஸ்டாப் அழுகையும்

நடிகர் ஆர்யா நயன்தாராவுக்கு ஸ்பெஷலாக திரையிட்ட படம் நயன்தாராவை நான் ஸ்டாப்பாக அழ வைத்துள்ளது.
படித்துறை படத்தை தயாரித்து பாதியில்விட்ட ஆர்யா மீண்டும் தனது தம்பி சத்யாவுக்காக தயாரித்த படம் அமரகாவியம். சத்யாதான் இதன் ஹீரோ. நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கம். இந்தப் படத்தை நயன்தாரா உள்ளிட்ட தனது நெருக்கமான நண்பர்களுக்கு திரையிட்டார் ஆர்யா.
 
படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கடைசி முப்பது நிமிடங்கள் குலுங்கி அழுதாராம் நயன்தாரா. படம் முடிந்த பிறகும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லையாம். வீட்டிற்கு சென்ற பிறகும் படத்தை நினைத்து அழுதாராம். ஐந்து தினங்களுக்குப் பிறகு அழுகையுடன்தான் ஜீவா சங்கரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு படம் நயன்தாராவை உணர்ச்சியில் பிழிந்தெடுத்திருக்கிறது.
கேட்கும் போதே படத்துக்கு கர்சீப் பத்தாது, பெட்ஷீட் தேவைப்படும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். 
 
இன்டஸ்ட்ரியில் இந்த அமரகாவியம் குறித்து நிலவும் கருத்தை சொல்லாமல் இந்த செய்தி முற்றுப் பெறாது. 2006 -இல் வெளியான இரு கொரிய படங்களின் தழுவல் அமரகாவியம் என்ற பேச்சு உள்ளது. ஒன்று, ஏ மில்லியனர்ஸ் பர்ஸ்ட் லவ், இன்னொன்று ஒன்ஸ் இன் ஏ சம்மர். 
 
ஜீவா சங்கரின் நான் படமும் ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்பதை இங்கு நினைவுகூர்க.