1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 18 செப்டம்பர் 2014 (11:59 IST)

அர்னால்டை அதிருப்திக்குள்ளாக்கிய முத்தம்

ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு வந்த அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், பாடல்களை வெளியிடுவதற்கு முன்பே தனது பேச்சை முடித்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் ஒரு முத்தம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
விழா தாமதமானது அர்னால்டை முதலில் அதிருப்தி அடைய வைத்தது. அரங்கின் குளிர்சாதன வசதியும் சரியில்லை. இந்நிலையில், மேடையில் தங்கள் உடற்கட்டை காட்டிய ஆணழகர்களில் ஒருவர் சட்டென்று அர்னால்டின் கையை பற்றி முத்தமிட்டார். என்னதான் இந்தியாவை புகழ்ந்து பேசினாலும் முன்பின் அறிமுகமில்லாத இந்தியர்கள் தங்கள் உடம்பை தொடுவதை வெள்ளையர்கள் இப்போதும் விரும்புவதில்லை. அர்னால்டின் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது. அந்த நிகழ்வைத் தொடர்ந்தே அவர் அரங்கைவிட்டு வெளியேறினார்.
 
விழாவில் கலந்து கொண்ட ரஜினியும், அர்னால்டும் பரஸ்பரம் கண்டு கொள்ளவில்லை, அர்னால்ட் பாதியில் வெளியேறினார், ஷங்கர் அர்னால்டின் பக்கத்தில் அமர்ந்ததால் ரஜினிக்கு அதிருப்தி என்று ஐ ஆடியோ விழாவைச் சுற்றி ஆயிரத்தோரு அதிருப்தி செய்திகள்.
 
பத்து கோடி தந்து அழைத்த நடிகரால் பக்கம் பக்கமாக சர்ச்சைகள். ஆச்சரியப்பட வைக்கும் என்று நினைத்த விழா இப்படி பேக் ஃபயர் ஆகும் என்று தயாரிப்பாளர் உள்பட யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.