வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 மார்ச் 2014 (10:46 IST)

அனுஷ்கா ஆன் டிமாண்ட்

ஒரே நேரத்தில் இரு சரித்திரப் படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு அஜீத், ரஜினி படங்களில் நடிப்பதற்கான ஆஃபர் இன்னும் நிலுவையில் உள்ளது. 

குணசேகர் இயக்கத்தில் ருத்தரம்மாதேவி படத்திலும், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் மகாபலி (தெலுங்கில் பாகுபலி) படத்திலும் அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார். இரண்டுமே சரித்திரப் படங்கள். குணசேகரின் படத்தில் டைட்டில் ரோலான ருத்ரம்மாதேவி வேடம் அனுஷ்காவுக்கு. அவர்தான் கதையின் நாயகன், நாயகி எல்லாம்.
Anushka

இவ்விரு படங்களையும் முடிக்கும்வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்பது அனுஷ்காவின் முடிவு. குணசேகரின் ருத்ரம்மாதேவி படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துவிட்டது. மகாபலியின் போர்க் காட்சிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் எடுக்கப்பட உள்ளன.
 
இப்படியொரு நிலையில் கௌதம் இயக்கத்தில் அஜீத்துடன் நடிக்க அனுஷ்காவை பரிசீலனை செய்தனர். 

கதைக்கு ஸ்டைலிஷnன நடிகை தேவை என அனுஷ்காவை நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாயின. அதே போல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் படத்திலும் அனுஷ்காவின் பெயர்தான் முதலில் அடிபட்டது.
 
இவ்விரு படங்களுக்கும் வேறு நாயகி ஒப்பந்தமாகாத நிலையில் அனுஷ்காவின் கால்ஷீட்டை கேட்கவே ப்ரியப்படுகிறார்கள் என ஸ்டுடியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கௌதம் படம் ஏப்ரலில் தொடங்கயிருக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் அஜித்துடன் நடிப்பது அனுஷ்காவா இல்லை வேறு யாரேனுமா என்பது தெரிந்துவிடும்.