வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (14:51 IST)

அஞ்சான் முடிந்தது, ஒரு பாடல்காட்சி மட்டுமே பாக்கி

அஞ்சான் படத்தின் டாக்கி போர்ஷன் கோவாவில் முடிவடைந்தது. இனி ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்கப்பட உள்ளது. 

மும்பையில் தொடங்கிய அஞ்சான் சமந்தாவின் சருமப் பிரச்சனை காரணமாக சில தினங்கள் தடைபட்டு நின்றது. ஆனால் அதற்குப் பிறகு முழுவேகத்தில் படப்பிடிப்பை நடத்தினார் லிங்குசாமி. மும்பையிலும், கோவாவிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இரு இடங்களிலும் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 
 
கோவாவில் போடப்பட்ட அரங்கில் நேற்று முன்தினம் கடைசிநாள் படப்பிடிப்பை நடத்தினார் லிங்குசாமி. அதில் சமந்தாவும் கலந்து கொண்டார். இனி ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே எடுக்கப்பட உள்ளது. வசனக் காட்சிகள் அனைத்தும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்துவிட்டன.
 
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் அஞ்சானில் சூர்யா ஹீரோவாக நடிக்க வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார். யுவன் இசை, ஆண்டனி எடிட்டிங். இனம் படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கிய சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு.
 
ஆகஸ்ட் 15 சுதந்திரத்தின ஸ்பெஷலாக அஞ்சான் வெளியாகிறது.