வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:19 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை நீ எனக்கு சொல்ல வேண்டும்; நடிகர் கதிரிடம் சொன்ன ஓவியா!

நடிகர் கதிர் சிகை என்ற படம் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வருகிறார். இப்படம் வெளியாக உள்ள நிலையில், இவர் இப்படத்திற்காக பல இடங்களில் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.


 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அவர் பேசும்போது, நிகழ்ச்சி முடிந்து நான் வெளியில் வந்த பிறகு இதுவரை நடந்த  எல்லா விஷயங்களையும் நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று ஓவியா தன்னிடம் கூறியுள்ளார் என்றார். மேலும் அவர், வெளியில் இருக்கும் ஓவியாவும் நிகழ்ச்சியில் இருப்பவரும் ஒன்றுதான். அவருடைய ரியல் கேரக்டரும் அதுதான் என்றார்.
 
நான் ஓவியா அழுதே பார்த்ததில்லை. அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் பார்த்தேன். கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஓவியாதான் வெற்றி பெறுவார் என்றார்.