வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (15:37 IST)

க\பெ ரணசிங்கம் என்னுடைய கதை! – வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்!

விஜய் சேதுபதி நடித்து வெளியாகியுள்ள க\பெ ரணசிங்கம் தனது கதை என எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து, விருமாண்டி என்பவர் இயக்கத்தில் வெளியான படம் க\பெ ரணசிங்கம். ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தனது சிறுகதை தொகுப்பிலிருந்து திருடப்பட்டுள்ளதாக எழுத்தாளர் மிடறு முருகதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அவலநிலையை மையப்படுத்தி தான் எழுதிய “தவிப்பு” என்னும் சிறுகதையை எடுத்து க\பே ரணசிங்கம் என படமாக எடுத்துள்ளதாகவும், இதனால் இயக்குனர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் புகாரளித்துள்ளார்.