1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (15:19 IST)

கதையின்றி தவிக்கும் சுசீந்திரன்

சுசீந்திரன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குகிறார். ஒரு படம் தெலுங்கில் தயாராகிறது. இன்னொரு படம் தமிழில்.

 
தமிழில் தயாராகும் படத்துக்கு அறம் செய்ய பழகு என்று பெயர் வைத்து பாடல் காட்சிகளையும் எடுத்தார். ஆனால் அவர் எழுதி வைத்த கதையில் ஏற்கனவே படம் வந்திருப்பதால் இப்போது புதுக்கதைக்கு அல்லாடி வருகிறார். சென்ற மாதம் புதுச்சேரியில்  கதை விவாதத்தில் ஈடுபட்டார் சுசீந்திரன்.
 
அறம் செய்ய பழகின் அடுத்த ஷெட்யூல்ட் இன்னும் தொடங்கப்படாததால் கதை இன்னும் தயாராகவில்லை என்கிறது படக்குழு.