1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 2 ஜூன் 2016 (13:15 IST)

இசைஞானியின் பிறந்த நாளை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..

தமிழ் மக்களின் மனங்களை தனது இசையால் கொள்ளையடித்தவர், இருண்ட மனங்களில் வெள்ளை அடித்தவர் நமது இசைஞானி இளையராஜா. உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தினம் தினம் கொண்டாடப்படுகிறது நமது ’ராஜா’வும், அவரது இசையும் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களாலும், இசை மேதைகளாலும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார். அன்னக்கிளியில் தொடங்கி தாரை தப்பட்டை வரை 1000 படங்களுக்கு இசையமத்து சாதனை படைக்க இதுவரையிலும் யாரும் இல்லை; இனிமேலும் யாரும் இல்லை.

கடந்த, 1993ல், லண்டன் ராயல் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்பது உள்ளிட்ட பல சாதனைக்கு சொந்தக்காரர் நமது ராஜா. அப்பேர்பட்ட இசைஞானி இளையாராஜாவின் 74 வது பிறந்த நாளை இணையதளவாசிகளும் கொண்டாடி தீர்க்கின்றனர்.



 
 


 

 

 


 

 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....