வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 14 மே 2018 (19:22 IST)

டபுள் மீனிங் படங்களை என்ஜாய் பண்ணணும்” – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்

‘டபுள் மீனிங் படங்களை என்ஜாய் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கணும்” என இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாதே’. மிஷ்டி சக்ரபோர்த்தி, அனைகா சோதி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருடைய முதல் படம் ‘பாணா காத்தாடி’ 2010ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன்பிறகு, இப்போதுதான் இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார்.
 
இவரிடம் டபுள் மீனிங் காமெடிப் படங்கள் குறித்து கேட்டபோது, “அதெல்லாம் டபுள் மீனிங் கிடையாது, எல்லாமே நேரடி அர்த்தம் தான். நாம மறைச்சி மறைச்சி பேசுவதால், அது டபுள் மீனிங் மாதிரி ஆகிவிடுகிறது. நல்ல படங்கள் வரும்போது, அதைக் கொண்டாடுவோம். இந்த மாதிரி படங்களை என்ஜாய் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கணும்” எனத் தெரிவித்துள்ளார்.