வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (19:47 IST)

30 -ஆம் தேதி நடிகர் சங்க செயற்குழு கூட்டம் - கட்டம் கட்டப்படுவாரா விஷால்?

நடிகர் சங்கப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. ராதாரவியும், சங்கத்தின் துணைத்தலைவர் கே.என்.காளையும் விஷால், நாசர் உள்ளிட்டவர்களை நாய்கள் என்று திட்டிபோதே சங்கத்தின் சுவர்களில் சூடேற ஆரம்பித்தது.

உறுப்பினர்களின் வற்புறுத்துதலுக்குப் பிறகு ராதாரவி, காளை இருவருக்கும் விளக்கம் கேட்டு சங்கத் தலைவர் சரத்குமார் நோட்டீஸ் அனுப்பினார். அதுபற்றி மீடியாவிடம் வாய் திறக்காதவர், சங்கத்தைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வந்தால் விஷாலை சங்கத்தைவிட்டே நீக்குவோம் என்றார்.

யாரோ இருமியதற்கு நான் ஏன் கஷாயம் குடிக்க வேண்டும்? அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதைவிட்டு என்னை சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதாக சொல்வது என்ன நியாயம்? அதற்கு ஏதாவது காரணம் சொல்ல முடியுமா? வர்ற தேர்தலில் நான் மட்டுமில்லை நாசர், ராஜேஷ் போன்ற சீனியர் நடிகர்களும் தேர்தலில் நிர்ப்பார்கள் என விஷால் முஷ்டி மடக்கினார்.

இந்நிலையில் வரும் 30-ஆம் தேதி சங்கத்தின் செயற்குழு கூடுகிறது. இதில் விஷாலுக்கு எதிராக விஸ்தீரணமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் கோடம்பாக்கம் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைக்கு வந்துள்ளது.