வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (13:28 IST)

ஆறு சண்டைகளுடன் அசரடிக்க வரும் விஜய்

ஆக்ஷன் படங்களுக்கு என்று ரசிகப்பட்டாளம் இருக்கதான் செய்கிறது. அதிலும் மாஸ் ஹீரோக்களின் சண்டைப் படம் என்றால் மண்டை உடைந்தாலும் கவலையில்லை என்று முதல்நாளே கவுண்டரில் முட்டிக் கொண்டு நிற்பார்கள்.
 
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சண்டைப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட காத்திருக்கிறது.
 
இந்தப் படத்தில் மொத்தம் ஆறு சண்டைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆறும் ஆறுவிதம். அதனால் சைனா, தாய்லாந்து என்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மிகச்சிறந்த சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த உள்ளனர். தமிழிலிருந்து திலீப் சுப்பராயன் ஒரு ஆக்ஷன் காட்சியை அமைக்கிறார். இந்தியிலிருந்து சுனில் ரோட்ரிக்ஸ். இதேபோல் சைனாவிலிருந்து சங் லின். இன்னொருவர் தாய்லாந்திலிருந்து. ஹாலிவுட் லீ விடேகரும் இந்த கூட்டணியில் இடம்பெறலாம் என்கிறார்கள்.
 
ஆக்ஷன் ப்ரியர்களே... காத்திருக்கிறது ஒரு மெகா விருந்து.