வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (12:57 IST)

‘பாகுபலி’க்கு கிடைத்த படுதோல்வி

‘பாகுபலி’யின் கதையை எழுதிய எழுத்தாளருக்கு, படுதோல்வி கிடைத்துள்ளது.
 


 

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பிரமாண்டமான ஹிட் படம் ‘பாகுபலி’. இந்தப் படத்தின் கதையை எழுதியவர், ராஜமெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். ‘நான் ஈ’ படத்தின் கதை கூட இவர் எழுதியதுதான். இவருடன் இணைந்துதான் ‘மெர்சல்’ படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார் அட்லீ.

அப்படியாப்பட்ட விஜயேந்திர பிரசாத், ஸ்டார் சேனலுக்கு ஹிந்தி சீரியல் கதை எழுதினார். ராதாவின் மகளான கார்த்திகா நாயர் தான் அந்த சீரியலின் ஹீரோயின். ‘பாகுபலி’ போலவே வரலாற்றுக் கதையான அந்த சீரியல், ஸ்டார் நிறுவனம் நினைத்த இலக்கை எட்டவில்லையாம். கதையில் எவ்வளவோ மாற்றங்கள் செய்தும் சீரியல் சூடுபிடிக்காததால், ‘நீங்க சீரியலுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…’ என்று சொல்லி விஜயேந்திர பிரசாத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டதாம்.