வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (16:20 IST)

‘மதுரை வீரன்’ மூலம் மீண்டும் களம் இறங்கும் சண்முகபாண்டியன்...

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.


 

 
‘சகாப்தம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கியவர் சண்முகபாண்டியன். இந்தப்படம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அதன் பின் அவர்  ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில், தன்னுடைய தந்தை விஜயகாந்துடன் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்புகளும், புகைப்படங்களும் வெளியானது. ஆனால், ஒரு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது.


 


 
இந்நிலையில், தற்போது அவர் ‘மதுரை வீரன்’ என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.. அது தொடர்பான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இது இவரின் இரண்டாவது படமாகும்.