வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (14:43 IST)

முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் சூர்யா!

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பை முடித்து படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.
 
இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் அருண் குமார் கூறுகையில் " முதல் முறையாக ,  இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவரும். மேலும் சூரியாவும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் தந்தை மகனாக நடிக்க வில்லை என்றாலும்  அவர்களுக்கு இடையே உள்ள உறவினில் ஒரு தனித்துவமான உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும்.
 
இப்படத்தில் விஜய் சேதுபதி முழு காது கேட்கும் திறன் இல்லாத திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னும் சொல்ல போனால், அவரை சுற்றி தான் கதை நகர்கிறது.


 
நடிகர் லிங்கா இப்படத்தின் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் பெரும் முயற்சி எடுத்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். படத்தில் நிறைய சுவாரஸ்யமான சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை கலைஞர் பிரதித் சீலம் (எ) நுங் படமாக்கியுள்ளார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு  பெரும் பகுதி தாய்லாந்து, மலேஷியா, கம்போடியா மற்றும் தென்காசியில் நடைபெற்றுள்ளது. படம் வருகிற 21 ம்  தேதி  உலகமுழுவதும் வெளியாக உள்ளது என கூறியுள்ளார் இயகுனர் S U. அருண் குமார்.