1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (16:44 IST)

’தெறி’ டீஸர் வரும் முன் கையை கிழித்துக்கொண்ட ரசிகர்

’தெறி’ டீஸர் வரும் முன் கையை கிழித்துக்கொண்ட ரசிகர்

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள தெறி படத்தில் டீஸர் வெளியாவதற்கு முன்பே தீவிர ரசிகர் ஒருவர் இரத்தத்தால் கையில் கிழித்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
 

 
இளைய தளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், மகேந்திரன் ஆகியோ நடிப்பில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘தெறி’. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. ஆனால், அதற்கு முன்பாக விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கையில், ரத்தத்தால் ’தளபதி’ என எழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
 
இதனை விஜய் ரசிகர் கொண்டாடினாலும், இதற்கு பலரும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். ’இந்த உடலும் அதில் வழியும் ரத்தமும் உன் பெற்றோர் உனக்கிட்ட பிச்சை’ என்று ஒருவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், இது போன்ற பைத்தியக்காரத்தனத்தில் யாரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.