1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:19 IST)

தனி ஒருவனை முதலில் பாராட்டியது யார் தெரியுமா?

தனி ஒருவன் இன்னும் சென்னை பாக்ஸ் ஆபிஸின் டாப் 5 -க்குள் இருக்கிறது. சரியாகச் சொன்னால், சென்ற வார இறுதியில் தனி ஒருவனின் வNல் அதிகரித்திருக்கிறது. இப்படியொரு வெற்றியை முதலில் கணித்து பாராட்டியவர் யார் தெரியுமா?
 


 




சாட்சாத் விஜய்யேதான்...

தனி ஒருவன் வெளியான அன்று மதியமே நடிகர் விஜய், மோகன் ராஜாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர்தான் தனி ஒருவனை முதலில் பாராட்டியவர் என்றார் மோகன் ராஜா.

படம் வெளியானதற்கு அடுத்த நாள் ஆந்திராவிலிருந்து நடிகர் ராம் சரண் தொலைபேசியில் மோகன் ராஜாவை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.

கொசுறு தகவல், தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கிறார்.