1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:51 IST)

காமெடியனாக தொடரும் வடிவேலு

நடித்தால் ஹீரோதான் என்று அடம்பிடித்து பல வருடங்களை வீட்டிலிருந்து கழித்த வடிவேலு, கத்தி சண்டையில் மீண்டும் காமெடியனாகியிருக்கிறார்.

 
அவர் தொடர்ந்து காமெடியனாக நடிப்பாரா இல்லை வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுமா என்ற அச்சம் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் உள்ளது. ஆனால், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.
 
கத்தி சண்டையை தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை தில்லுக்கு துட்டு ராம்பாலா இயக்குகிறார்.
 
தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பது என்று வடிவேலு முடிவு செய்துள்ளாராம். நல்ல முடிவு.