வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (17:39 IST)

நானே தயாரிக்கிறேன் - வடிவேலை ரிஸ்க் எடுக்க வைத்த இயக்குனர்

நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார் வடிவேலு. தெனாலிராமன், எலி படங்களின் தோல்விகளுக்குப் பிறகும் இந்த கொள்கையில் மாற்றமில்லை. எக்காரணம் கொண்டும் தான் நடிக்கும் படத்தை தானே தயாரிப்பதில்லை என்பது வடிவேலின் துணை கொள்கை.


 
 
இந்த இரண்டிலும் வடிவேலு உறுதியாக இருந்ததால் அடுத்தப் படம் எட்டாக்கனியாக இருந்து வந்தது.
 
இந்நிலையில், நலன் குமாரசாமி வடிவேலிடம் ஒரு கதை கூறினார். சூதுகவ்வும் படத்தின் மூலம் அனைவரின் நெஞ்சத்தையும் கிள்ளிய இயக்குனர். அவர் சொன்ன கதை பிடித்துப் போகவே, உடனே நடிக்க கால்ஷீட் தந்ததுடன், தனது துணைக்கொள்கையை தளர்த்தவும் முன்வந்தார். அதாவது, நலன் இயக்கும் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார் வடிவேலு.
 
2016 -இல் இன்னும் சில ஆச்சரியங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.