வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 5 மே 2017 (12:13 IST)

நடிகர் பிரதீப் கொலை செய்யப்பட்டாரா? - போலீசார் விசாரணை

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் பிரதீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் நம்புவதாக தெரிகிறது.


 

 
முன்னணி தமிழ் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் முதன்மை ரோலில் நடித்து வந்த நடிகர் பிரதீப் தற்கொலை சமீபத்தில் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடன் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது தலை மற்றும் உடலின் சில இடங்களில் ரத்தகாயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. கண்ணாடிகளும் உடைந்து கிடக்கிறது. ஆகவே, அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. 


 

 
எனவே, இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.