வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (13:04 IST)

இந்தியை ஒதுக்கும் த்ரிஷா, நயன்தாரா

இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான நடிகைகளின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் த்ரிஷா, நயன்தாரா இருவரும் இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை கதை கேட்காமலே நிராகரித்து விடுகின்றனர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இவர்கள் இந்திக்கு சென்றால் அறிமுக நடிகைகளாகவே பார்க்கப்படுவார்கள். அங்குள்ள கரீனா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோன் ஆகியோருக்கு கிடைக்கிற மதிப்பும், விளம்பரமும் இவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது.

யானைக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல். அதனால் இந்தியில் அறிமுகமாக இருப்பதற்குப் பதில் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பதே நல்லது என்ற அடிப்படையில் இந்தி என்றhலே நஹி சொல்லிவிடுகிறார்கள் இருவரும்.
 
சமீபத்தில் நயன்தாராவுக்கு வந்த இந்திப்பட வாய்ப்பை அவர் கதை கேட்காமலே ஒதுக்கித் தள்ளியது குறிப்பிடத்தக்கது.