1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:13 IST)

முதல் இடத்துக்கு சண்டை போட்ட போட்டியாளர்கள்! கோபத்தில் வெளியேறிய ஐஸ்வர்யா

முதல் இடத்துக்கு சண்டை போட்ட போட்டியாளர்கள்! கோபத்தில் வெளியேறிய ஐஸ்வர்யா பிக்பாஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.  
பிக் பாஸில் நேற்று ஒன்று முதல் ஆறு கட்டங்கள் வரிசையாக படிக்கட்டு போல் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் இடத்தில் நிற்பதுக்கு ஐஸ்வர்யா மற்றும் சக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக நடந்த போட்டிகளில் நடந்த சம்பவங்களை சக போட்டியாளர்கள்,  ஐஸ்வர்யாவிடம் குறிப்பிட்டு காட்டினார்கள். அப்போது ஐஸ்வர்யா, நீங்க எல்லாம் என்ன டார்கெட் பண்றீங்க என கத்தினார். கடைசியில் கூடிக்கூடி பேசினார்கள்.
 
முதலிடத்தில் யாஷிகாவும், 3வது இடத்தில் ஐஸ்வர்யாவும் அமர்ந்தனர். 2வது இடத்தில் ரித்விகா அமர வைக்கப்பட்டார். இதனால் மீண்டும் எல்லோரும் 1வது, 2வது இடத்துக்கு சண்டை போட்டனர்.