வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (10:36 IST)

எடிட் பண்ணிடறாங்க... ஒரு நடிகையின் புகார்

கவுரவ வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு, நமக்கு சொல்லாமலே காட்சிகளை எடிட் செய்துவிடுகிறார்கள் என நடிகை சுஜா  வாருணி புகார் தெரிவித்துள்ளார்.

 
இரண்டரை மணிநேர படத்துக்கு எட்டு மணிநேர காட்சிகளை படமாக்குகிறார்கள் சில இயக்குனர்கள். திரைக்கதையில் கவனம்  செலுத்தாமல் இப்படி கண்டபடி காட்சிகளை எடுக்கும் போது முதலில் வெட்டப்படுவது, கவுரவ வேடங்களில் நடிப்பவர்களின்  காட்சிகள். இந்த கொடுமைக்கு பலமுறை ஆளாகியிருப்பார் போலிருக்கிறது சுஜா வாருணி.
 
அவர் நடித்திருக்கும் குற்றம் 23 திரைக்கு வந்திருக்கும் நிலையில், கவுரவ வேடம் என்று அழைக்கிறார்கள். கஷ்டப்பட்டு  நடிக்கிறோம். ஆனால், அப்படி நடித்ததை எடிட் செய்துவிடுகிறார்கள். தங்கள் கதைக்கு எது தேவை என்று தெரியாமல் எதற்கு  இவர்கள் படம் இயக்க வேண்டும் என்று கடிந்துள்ளார்.
 
நியாயம்தானே.