வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (16:07 IST)

அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் – நடிகர் விஷால் அறிவிப்பு

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக, மே 30ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்  தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

 
 
கடந்த சில வருடங்களாகவே திருட்டு விசிடிக்கு எதிராகப் போராடி வருகிறார் விஷால். நடிகர் சங்க செயலாளராக ஆனதில் இருந்து அதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ஆகியிருப்பதால், திருட்டு விசிடியை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை என்று சதா சர்வ காலமும் அதிலேயே ஈடுபட்டு இருக்கிறார். 
 
சமீபத்தில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தபோது கூட, இதுதொடர்பாக கோரிக்கை வைத்தார் விஷால்.  இந்நிலையில், சற்றுமுன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால், “திருட்டு விசிடியை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மே 30ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில்  ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.