வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (14:32 IST)

தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விஷால் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது: தாணு

தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விஷால் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது. செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாணு கூறும்போது,, நடிகர் சங்க தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. விஷால் அணியினர் சினிமாவை கேவலப்படுத்துவது போல் பேசித் திரிகிறார்கள். இந்த பிரச்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அமைப்புகள் சமாதான முயற்சி மேற்கொண்டன. ஆனால், சமரசத்தை ஏற்க விஷால் மறுத்து எனக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டு மாதம் ரூ.24 லட்சம் வருமானம் வருவதற்கான ஏற்பாடுகளைத்தானே நடிகர் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். இதனை விஷால் ஏன் விமர்சிக்கிறார்.. எதிர்காலத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விஷால் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. முதல்வரே அழைத்தாலும், சமாதானத்துக்கு வரமாட்டேன் என்று அவர் சொன்னதாக வந்த செய்திக்குக் கூட இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனவே நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.