வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:24 IST)

காலையில் ‘அம்மா’ என்பார்கள் ; இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள் – ஒரு நடிகையின் வாக்குமூலம்

‘காலையில் ‘அம்மா’ என்பார்கள், இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள்’ என ஒரு நடிகை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 
தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீ ரெட்டி தான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார். சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அவர் வெளியிட்டு வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
 
இந்நிலையில், சில துணை நடிகைகளுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்ரீ ரெட்டி. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடித்துவரும் சந்தியா நாயுடு பேசும்போது, “பெரும்பாலும் அம்மா அல்லது அத்தை கேரக்டர்களில் தான் நடித்து வருகிறேன். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை ‘அம்மா’ என்று அழைப்பார்கள், ஆனால், இரவில் படுக்கைக்கு அழைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.