வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (15:08 IST)

திறமைக்கு வாய்ப்பு - வாசலைத் திறந்த அருண் விஜய்

இன் சினிமாஸ் என்டர்டெய்ன்மெண்ட் என்ற புதிய பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்.


 

 
என்னை அறிந்தால் படத்துக்கு முன்புவரை, அருண் விஜய்யை வைத்து படம் எடுக்கவே ஆளில்லை. இப்போது அவரே தயாரிப்பாளராகியிருக்கிறார்.
 
இந்த மேஜிக்கை நிகழ்த்தியது, என்னை அறிந்தால் என்ற ஒரேயொரு படம். அந்தப் படம்தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. என்னை அறிந்தாலுக்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படத்திலும் அருண் விஜய் நடிக்கவில்லை.
 
அதேநேரம் தெலுங்கில் ராம் சரண் தேஜாவுடனும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடனும் நடித்து வருகிறார். விரைவில் கௌதம் இயக்கும் தமிழ்ப் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
 
தனது புதிய பட நிறுவனத்துக்கு இன் சினிமாஸ் என்டர்டெய்ன்மெண்ட் என பெயர் வைத்துள்ளார். திறமையிருக்கும் புதியவர்களை ஊக்குவிக்க திட்டமிட்டிருப்பதாக அருண் விஜய் தெரிவித்தார்.
 
அருண் விஜய்யின் வா படம் முதற்கொண்டு பல படங்களை ஃபெதர் டச் நிறுவனம் தயாரித்தது. இது அருண் விஜய்யின் மனைவியின் தந்தையின் நிறுவனம்.
 
அதாவது மாமனாருடையது. இந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த வா படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி தாமதமானது. அதன் காரணமாகவே அருண் விஜய் புது படநிறுவனம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.