வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (21:47 IST)

தன்ஷிகாவுக்கு ஆறுதல் சொல்ல ஆர்மி ஆரம்பித்த டுவிட்டர் பயனாளிகள்

இன்று நடந்த விழித்திரு' பட விழாவில் நன்றி சொல்லிய தன்ஷிகா தனது பெயரை சொல்ல மறந்தததற்காக டி.ராஜேந்தர் சபை நாகரீகம் குறித்து தன்ஷிகாவுக்கு வகுப்பு எடுத்தார்.



 
 
தெரியாமல் நடந்துவிட்ட ஒரு தவறுக்கு தன்ஷிகா மன்னிப்பு கேட்டும், அந்த மன்னிப்பையும் தனது அடைமொழியால் அசிங்கப்படுத்திய டி.ராஜேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் பயனாளிகள் தன்ஷிகா ஆர்மியை ஆரம்பித்து அதில் டி.ராஜேந்தரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
சபை நாகரீகம் இல்லாமல் பேசிய டி.ராஜேந்தர், சபை நாகரீகம் குறித்து வகுப்பு எடுப்பது பொருத்தமில்லாதது, ஒரு மேடையில் நாகரீகத்தோடு பேசுவது எப்படி என்று டி.ராஜேந்தர் குடும்பத்திற்கே கிடையாது என்றும் டுவிட்டர் பயனாளிகள் விமர்சனம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.