வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஜூலை 2015 (15:45 IST)

சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷால்

பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷாலின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அவரே தயாரிப்பாளர் என்பதால், படம் வெளிவருமா வராதா என்ற கவலையும் இல்லை.
 
சரத்குமாரையும் நடிகர் சங்க நிர்வாகிகளையும் எதிர்க்க ஆரம்பித்தபின், அவரே ஒரு பவர் சென்டராகிவிட்டார்.
 
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாயும் புலி முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
 
இதையடுத்து கொம்பன் முத்தையாவின் இயக்கத்தில் ஒரு படம். லிங்குசாமியின் சண்டக்கோழி இரண்டாம் பாகமும் இருக்கிறது.
 
இந்தப் படங்களுடன் நண்பர் திரு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
அலெக்ஸ் பாண்டியன் என்ற மெகா மொக்கைக்குப் பிறகு ஜெயம் ரவியை வைத்து சகலகலாவல்லவன் படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். வரும் 31 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் விஷhல் நடிக்கும் படத்தை இயக்குவதாக தகவல்.
 
பாண்டிராஜ் படத்துக்குப் பிறகு விஷால் கால்ஷீட் தரவிருப்பது முத்தையாவுக்கா, லிங்குசாமிக்கா, திருவுக்கா இல்லை சுராஜுக்கா பட்டிமன்றம் நடத்த சிறந்த தலைப்பு.