வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (09:21 IST)

சுஹாசினியின் கருத்து பற்றி கமல் - சரி என்கிறாரா தவறு என்கிறாரா?

ஓ காதல் கண்மணி படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் பேசிய சுஹாசினி, மவுஸ் பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள் என்று இணையத்தில் விமர்சனம் செய்கிறவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
 

 
பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த கமலிடம், சுஹாசினியின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், அற்பனுக்கும் மவுஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான். ஏன்னா, மவுஸ் அவனுடையது. அதை நான் ஒன்றும் செய்ய முடியாது. விமர்சனத்தை தடுக்கவும் கூடாது. சுஹாசினியின் கருத்தை நான் தவறு என்று சொல்லவில்லை, அதுவும் ஒரு கருத்து அவ்வளவுதான் என்றார்.
 
சுஹாசினியின் கருத்தை சரி என்கிறாரா தவறு என்கிறாரா?