செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (08:53 IST)

லிங்கா முடிந்தது - சுதீப்பை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்

லிங்கா படம் முடிந்துவிட்டது. டிசம்பர் 12 ரிலீஸ். அதையடுத்து ஃப்ரவரியில் சுதீப் நடிக்கும் த்ரில்லர் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
 
உண்மையில் இந்தப் படத்தைதான் ரவிக்குமார் முதலில் தொடங்குவதாக இருந்தது. அந்த நேரம் லிங்காவை இயக்க வாய்ப்பு கிடைத்ததால், ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, லிங்காவை முதலில் முடிக்கிறேன் என்று சுதீப் படத்தை நிறுத்திவைத்து ரவிக்குமார் லிங்காவுக்கு வந்தார். சுதீபுக்கும் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை. ரஜினியே போன் செய்து லிங்காவுக்கு வழிவிடும்படி கேட்ட பிறகு மறுபேச்சுக்கு இடமேயில்லை.
 
ஃப்ரவரியில் தொடங்கப் போகும் படம் ஒரு த்ரில்லர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கிறார்கள். நான் ஈ படத்துக்குப் பிறகு தாய் மொழியான கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கிலும் சுதீப் பிரபலமாகிவிட்டதால் இந்த முடிவு.
 
படம் குறித்த பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.