வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (16:34 IST)

நாளை முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த தடை

கோடை விமுறை தொடங்கிவிட்டதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மகிழ்விக்க மலர் கண்காட்சி, தாவர கண்காட்சி பழக்கண்காட்சி என்று அரசு தரப்பும் வேலைகளை மும்முரமாக முடுக்கிவிட்டுள்ளது.
 
சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாளை முதல் ஜுன் ஒன்றாம் தேதிவரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தத் தடை ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்துவதுதான் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.