வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (18:17 IST)

ஸ்ரீதிவ்யாவால் காய்ந்து போன காட்டு மல்லி

ஸ்ரீதிவ்யா ஆசீர்வதிக்கப்பட்டவர். அவர் முதலில் நடித்த இரு படங்கள் இன்னும் வெளியாகவில்லை. மூன்றாவதாக அவர் ஒப்பந்தமானதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்தப் படம் ஒரே நாளில் ஸ்ரீதிவ்யாவை ஸ்டாராக்கியது.

சுசீந்திரனின் ஜீவாவில் ஹீரோயின், தனுஷ் தயாரிப்பில் மீண்டும் சிவ கார்த்திகேயன் ஜோடியாக காக்கி சட்டை, விக்ரம் பிரபு ஜோடியாக வெள்ளைக்கார துரை, ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில் என்று ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் டைரி பொங்கி வழிகிறது. 
 
இந்த நேரத்தில் அவர் முதலில் ஒப்பந்தமான படங்களின் - காட்டு மல்லி, நகர்ப்புறம் - தயாரிப்பாளர்கள் அவரை நெருக்குகிறார்கள்.  காட்டு மல்லியில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் பாக்கி உள்ளன. அடுத்து அஜீத்தா, விஜய்யா என்று கனவு காண்பவரிடம் காட்டு மல்லிக்கு என்ன மதிப்பிருக்கும்?
 
அதெல்லாம் நடிக்க முடியாது என்று அவர் சொல்ல, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் பஞ்சாயத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கக் கதவைத் தட்டியிருக்கிறார். 
 
காட்டு மல்லி மீதும் கொஞ்சம் கருணை காட்டுங்க அம்மணி.