வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (10:34 IST)

மீண்டும் தாத்தாவாகும் ரஜினி

கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, சௌந்தர்யா படம் இயக்கிதான் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. அவர் விரைவில் குழந்தை பெற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. சௌந்தர்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
 
கோச்சடையான் படத்தை சௌந்தர்யா இயக்கியதில் பல்வேறு நஷ்டங்கள் மட்டுமே ஏற்பட்டன. இப்போது படம் இயக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி ஈரோஸின் முக்கிய பொறுப்பில் உட்கார்ந்திருக்கிறார். அவர் குழந்தை பெற்று குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே ரஜினியின் விருப்பம்.
 
அந்த விருப்பம் விரைவில் நிறைவேறப் போகும் மகிழ்ச்சியில் உள்ளது ரஜினி குடும்பம்.