வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (14:12 IST)

“கொடுத்த காசுக்கு மேல ஏன் நடிக்குற?” – ஹீரோவை கலாய்த்த உறவினர்

‘கொடுத்த காசுக்கு மேல ஏன் நடிக்குற?’ என பிரபல நடிகரைக் கலாய்த்துள்ளார் அவருடைய உறவினர் ஒருவர்.


 
 
மிகப்பெரிய இயக்குநர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. ‘இறைவி’யில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டதால், தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்திலும், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
 
ஆனாலும், சில இடங்களில் அவருடைய நடிப்பு ‘ஓவர் ஆக்டிங்’ என்று கிண்டல் செய்யப்படுகிறது. இதை அவரே ஒப்புக் கொள்கிறார். “இயக்குநராக இருந்துவிட்டு நடிக்க வருவதால் உண்டாகும் பிரச்னை அது. என் ஊரில் உள்ள அக்கா கணவர், ‘அந்தப் படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் தந்தார்கள்?’ என ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றிக் கேட்டார். நானும் சம்பளத்தைச் சொன்னேன். ‘அந்த சம்பளத்துக்கு மட்டும் நடிக்க வேண்டியதுதானே? ஏன் அதற்கும் மேலயும் நடிக்கிற?’ என்று வெளிப்படையாகக் கேட்டார். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதை மாற்றி வருகிறேன்” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.