வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (17:07 IST)

மக்களுக்கு அண்டா வைத்து பால் ஊற்றிய சிம்பு ரசிகர்கள்! வைரல் வீடியோ

சிம்பு சொன்ன வாக்கை மீறாமல் அவரின் ரசிகர் ஒருவர் மக்களுக்கு அண்டாவில் பால் ஊற்றிய வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


 
நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்" படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று  காலை 5 மணிக்கே படம் வெளியாகியது. 
 
சுந்தர்.சி இயக்கி லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
படத்திற்கு கட் - வுட் வைங்க , ஆண்ட அண்டா அண்டாவா பால் ஊற்றுங்க என்றெல்லாம் சர்ச்சையான கருத்துக்களை கூறிய சிம்பு  கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகினர். 
 
பிறகு தான் சொல்லவந்த கருது வேறு நீங்கள் புரிந்துகொண்ட கருது வேறு என்று கூறி சமாளித்தார். கட் - அவுட்டுக்கு வீணாக பால் ஊற்றுவதை தவிர்த்து ஏழை மக்களுக்கு பால் கொடுங்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன் என்று சமாளித்தார்.