செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:40 IST)

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி: ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் படத்தை இயக்கிய சிம்புதேவன்

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தததை இன்னும் பலர் நம்ப முடியாமல் திகைத்து போயுள்ளனர். தமிழ்த்திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணியை யாராலும் நிரப்ப முடியாது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் கடைசி தமிழ் திரைப்படமான 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி! மிகுந்த சினிமா நேசிப்பும் அற்பணிப்பும் கொண்ட இந்தியாவின் மிக முக்கிய நடிகை! அவர் மறைவு பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது! சினிமா இருக்கும் வரை அவர் நம்மோடு வாழ்வார். RIP' என்று கூறியுள்ளார்.

சிம்புதேவனின் 'புலி' திரைப்படம் தோல்வி அடைந்தது என்பதும், இந்த படத்தில் ஸ்ரீதேவியை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது