வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:40 IST)

தெலுங்கு படத்துக்குப் பின் பாலிவுட் படம்… தமிழ் சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறாரா சங்கர்!

இயக்குனர் ஷங்கர் அடுத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க வுள்ளார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் ராம் சரண் படத்தை இயக்கி முடித்துவிட்டு ஷங்கர் அங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு நேரடியாக ரண்வீர் சிங்கைக் கதாநாயகனாக வைத்து ஒரு பாலிவுட் படத்தை இயக்க உள்ளாராம். இப்போதைக்கு அவர் இயக்கத்தில் தமிழ்ப் படம் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.