வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (16:15 IST)

கிராமத்துப் பெண்ணாக நடிக்க ஆசைப்படும் ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே, கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

 
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’ படத்தில் நடித்துள்ள ஷாலினி, தற்போது ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். பாண்டிச்சேரி, பாங்காக்கைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு, கிராமத்துக் கதையாகக் கேட்டு வருகிறாராம் ஷாலினி பாண்டே. “தமிழகத்தின் கலாச்சாரம், கிராமத்து வாழ்க்கை முறைகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனவே, கிராமத்துப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை” என்கிறார் ஷாலினி.
 
கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘நடிகையர் திலகம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஷாலினி.