1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (09:54 IST)

காமம், கவர்ச்சி... அவர் திரும்ப வந்திருக்கார்

ஷக்தி சிதம்பரத்தின் படங்கள் என்றால் மேலே உள்ள காமம், கவர்ச்சி இரண்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதேபோல் ஒரு நாயகியுடன் திருப்திப்படுகிற ஆளும் கிடையாது.
 
இவருடைய ராஜாதிராஜா படத்தை (லாரன்ஸ் நடித்தது) நடிகை சுஹாசினி கழுவி ஊற்றியது சர்ச்சையானது நினைவிருக்கலாம். கடைசியாக இவர் இயக்கிய படம் குரு சிஷ்யன்.
 
எப்படி படம் எடுக்கக் கூடாது என்பதற்கு ஷக்தி சிதம்பரத்தின் படங்கள் நல்ல உதாரணங்கள். குரு சிஷ்யனின் கிளைமாக்ஸில் கதைக்கும் காட்சிக்கும் சம்பந்தமேயில்லாமல் ஒரு புலியை காண்பித்து, இது கொட்டை எடுத்த புலியா இல்லை, கொட்டை எடுக்காத புலியா என்றெல்லாம் புலியை கேவலப்படுத்தியிருந்தார். புலியை இவ்வளவு மட்டமாக காட்டிய நபர் இவராகதான் இருப்பார். ஏன் அப்படி...?
 
ஒரு சின்ன பிளாஷ்பேக். திரையுலகின் கட்டுப்பாட்டை மீறி அசின் இலங்கைக்கு சென்றதோடு இலங்கை அரசின் விளம்பர தூதுவர் போல் செயல்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை எந்த தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என வாய்மொழி உத்தரவு போட்டிருந்த நேரம் விஜய்யின் காவலன் படத்தில் எதிர்ப்புகளை மீறி நடிக்க வைக்கப்பட்டார். அந்தப் படம் எதிர்ப்பாளர்களால் சிக்கலுக்குள்ளான போது காவலனை வாங்கி வெளியிட்டவர் ஷக்தி சிதம்பரம். 
 
கடனில் இருக்கிறேன் என்று முந்தையப் படத்தில் சொன்னவர் பல கோடி கொடுத்து காவலன் படத்தை வாங்கியது எப்படி என்பது இன்னும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது.
 
2010 -க்குப் பிறகு காணாமல் போனவர் 2014 -இல் திரும்பி வந்திருக்கிறார். படம் ஜெயிக்கிற குதிர.
 
ஜீவன் நடிக்கும் இந்தப் படத்தின் போட்டோஷுட் ஸ்டில்களிலும் சதைதான் பிரதானமாக தெரிகிறது. ஒன்றுக்கு மூன்று நாயகிகள். திரைப்பட கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ள இதிலும் நிறைய வைத்திருப்பார் ஷக்தி சிதம்பரம்.