வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : சனி, 3 அக்டோபர் 2015 (12:52 IST)

எதிரணியை தூண்டிவிடுகிறார் - கமல் மீது சரத்குமார் பகிரங்க குற்றச்சாட்டு

நடிகர் சங்கத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மோதலை உருவாக்கியிருக்கிறது. இரண்டு அணியினரும் பரஸ்பரம் கூறிக்கொள்ளும் குற்றச்சாட்டுகள் நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை செங்கல் செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறது.
 

 


நடிகர் சங்கத்தின் இப்போதைய தலைவர் சரத்குமார், நடிகர் கமல்ஹாசன் மீது, பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது -

"கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினையில் இருந்து நடிகர் சங்கத்தை குற்றம் சாட்ட தொடங்கினர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் நான் பெரும் முயற்சி எடுத்தேன், அதுபோல் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோதும் நான் தலையிட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்தேன்.

ஆனால் அதற்காக கமல்ஹாசன் ஒரு நன்றி கூட எனக்கு தெரிவிக்கவில்லை. நன்றியை எதிர்பார்த்து நானும் அந்த காரியங்களை செய்யவில்லை. நடிகர் சங்க தேர்தலிலும் எதிர் அணியினரை கமல்ஹாசன்தான் தூண்டி விடுகிறார். " என்று சரத்குமார் தெரிவித்தார்.

சரத்குமாரின் இந்த குற்றச்சாட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் விஷால் அணியினருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்தார். அந்த கோபத்தில் சரத்குமார் இப்படியொரு குற்றச்சாட்டை கூறியிருப்பதாக திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.