வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 13 டிசம்பர் 2014 (14:03 IST)

காதல் கொண்டேனை இந்தியில் இயக்கும் செல்வராகவன்

புலி வருது கதையாகதான் இருக்கிறது செல்வராகவனின் படம் குறித்த தகவல்கள். இரண்டாம் உலகத்தின் மகத்தான தோல்விக்குப் பிறகு சிம்புவை அவர் இயக்குவதாக கூறப்பட்டது. 
 
சிம்பு இல்லை, வேறொரு ஸ்கிரிப்டை செல்வராகவன் எழுதி வருகிறார் என்றனர். செல்வராகவனும் அதனை உறுதி செய்தார். அதன் பிறகு கொஞ்ச நாள் சத்தத்தையே காணோம். பிறகு தனுஷ், செல்வராகவன் - ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா - யுவன் மூவரும் இணையும் படத்தை தனது வுண்டர்பார் தயாரிக்கிறது என்றார். இந்த மூவர் அணி ஏற்கனவே ஒயிட் எலிபெண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, தொடங்கிய கையோடு ஆளுக்கொரு பக்கம் பிரிந்து சென்றது கடந்தகால வரலாறு.
 
தனுஷின் அறிவிப்பு என்னானது என தெரியவில்லை. இப்போது தனது காதல் கொண்டேன் படத்தை இந்தியில் இயக்க தீவிரமாக இருக்கிறார் செல்வராகவன். பல வருடங்கள் முன்பு இந்த கதையில் விவேக் ஓபராய் நடிக்க செல்வா இந்தியில் இயக்குவதாக இருந்தது. 
 
இந்தமுறையாவது செல்வாவின் காதல் கொண்டேன் இந்திக் கனவு பூர்த்தியாகுமா?